tamilnadu

img

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கிடுக

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்


கோவை, அக்.18- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அனை வருக்கும் கருணைத் தொகை  வழங்க வலியுறுத்தி  கோவையில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கஜா, தானே, வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்வாரிய கட்டுமான சேதங்களை சீரமைத்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் அறிவித்துள்ள கரு ணைத் தொகை ரூ.4 ஆயிரத்தை உடனடியாக அனை வருக்கும்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார் பில் வெள்ளியன்று கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்த்தில் திரளானோர் பங் கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.