முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை,ஜன.3- ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடத்தப் படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டி யுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 அன்று தொடங்கி, 3 ஆம் தேதியன்றும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடத்தப்படு வதாகவும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் மிகப் பெரும் குளறு படிகள் நடந்து உள்ளதாகவும், அத னையும் மீறி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.