சென்னை,ஏப்.4- கரோனா நோய்த்தொற்று பரவு வதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவ தும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ஏழை பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 உதவித்தொகை செலுத்தும் பணியை மத்திய அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அந்த தொகையை எடுக்க மக்கள் ஒரே நேரத்தில் வங்கிகளில் குவிந்து நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.