tamilnadu

img

கொரோனா அறிகுறி.... தனிமை வார்டில் இருந்த இளைஞர் தற்கொலை

லக்னோ
நாட்டின் வடபகுதி மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொரோனா அறிகுறிகள் கொண்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஷாம்லி மாவட்ட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது," ஷாம்லி மாவட்ட மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனிமை வார்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு இன்னும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இளைஞர் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் மன அழுத்தத்தால் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;