tamilnadu

img

தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அடைக்க கட்டுமானம்

வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

ராணிப்பேட்டை, ஜூலை 14- ராணிப்பேட்டைமாவட்டம் வாலாஜா அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட  ஆதிதிராவிட  மக்கள் பல ஆண்டுகளாக வசித்து  வசிக்கின்றனர். அங்குள்ள படவேட்டம்மன் கோவிலை  நிர்வகித்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சாதி  ஆதிக்க சக்திகள், கோவிலின் ஒரு பகுதியில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை (அரசு புஞ்சை நிலம்) தடுக்கும் வகையில் சாதி வன்மத்தோடு 12 அடி உயரம், 3அடி அகலத்தில் தீண்டாமை சுவரை கட்டினர். சுவரை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற தொடர் போராட்டத்தின் விளைவாக சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

இது குறித்து பலமுறை சார் ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.  அவர் அதனை வழக்காக ஏற்று  நடத்தி தீர்ப்பாணையை வெளியிட்டார். அதில் பிரச்ச னையை சிவில் நீதிமன்றம் மூலமாக தீர்த்து கொள்ள  வேண்டும். கோவில் அமைந்துள்ள பகுதியில் புதிதாக  எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக் கூடாது, கோவி லில் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு எந்தவித  தடையும் இல்லை. சர்வே எண் 2038/2, 477.5 சதுர மீட்டர்  பரப்பளவு உள்ள அரசு நத்தம் காலியிடத்தை உரிய சட்ட  நடைமுறைகளைப் பின்பற்றி அந்த இடத்தை ஆக்கிர மிப்பாக கருதி,  ஆக்கிரமிப்பை வாலாஜா வட்டாட்சி யர் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் சார் ஆட்சியரின் உத்தரவை மீறி  கோவிலை  நிர்வகிக்கும் சாதி ஆதிக்க சக்திகள் மீண்டும் ஊரடங்கு  உத்தரவு (144 தடையுத்தரவு) நடைமுறையில் உள்ள  நேரத்தில் கட்டுமான பணிகளை துவக்கியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  தலையிட்டு  கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். தீண்டாமைச் சுவரை அகற்றி  சார் ஆட்சியர் வழங்கிய  உத்தரவின்படி தலித் மக்களுக்கு பொதுப் பாதையை  ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்திக்கடை, சோளிங்கர், நெமிலி, கலவை பேருந்து நிலையங்கள், வாலாஜா, ஆற்காடு  வட்டாட்சியர் அலுவலகங்கள், அரக்கோணம் பழனிப்  பேட்டை, மாம்பாக்கம் கூட்ரோடு ஆகிய 8 மையங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தா.வெங்கடேசன், டி.சந்திரன், எல்.சி.மணி, வட்டச் செயலாளர்கள் துரைராஜ், ரமேஷ், செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ரேணு, மோகன், சம்பத், நாகராஜ், சத்தியமூர்த்தி, சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.