சென்னை, மே 13 - கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை மூடப் பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்தி ரேசன் தாக்கல் செய்துள்ள மனு வில், 1996ஆம் ஆண்டு முதல் கொத்தவால் சாவடியில் இயங்கி வந்த காய்கறி சந்தை கோயம் பேட்டிற்கு மாற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் மொத்த காய்கறி விற்பனை உரிய அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊர டங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அத னால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று கூடுதலாக பரவியதை யடுத்து, மே 5ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
சில்லறை காய்கறி விற்ப னைக்கும், உணவு தானிய விற்ப னைக்கும் தொடர்பு இல்லாத நிலை யில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனை யாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி (சிஎம்டிஏ), மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையர் பதில ளிக்க உத்தரவிட்டு வழக்கு விசார ணையை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.