tamilnadu

img

பணிந்தது உ.பி. பாஜக அரசு...    ஹத்ராஸ் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி… 

லக்னோ 
பாஜக தலைமையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சாமியாரான யோகி ஆதித்யநாத் முதல்வர் பணியை கவனித்து வருகிறார். இவரது அமைச்சரவை பொறுப்பேற்ற காலத்தில் இருந்து இன்று வரை உத்தரப் பிரதேச மாநிலம் நாட்டின் பாலியல் கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே இம்மாநிலத்தில் நிகழ்ந்த உன்னாவ் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதுமிக்க தலித் பெண் ஒருவர்  2 வாரங்களுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் உயிரிழந்தார்.  உயிரிழந்த அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் தராமல் உபி போலீசார்கள் தங்களாவே எரித்துள்ளனர். 

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற ஹத்ராஸ் மாவட்டம் செல்ல (அக்., 1-ஆம் தேதி)  முயன்றனர். அவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். குறிப்பாக ராகுல் மீது தாக்குதல் நடத்தும் விதத்தில்  நடந்து கொண்ட போலீசார் அவரை கீழே தள்ளிவிட்டனர். ராகுல்காந்தி  சாலையில் விழுந்தார். ராகுல் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். குறிப்பாக பாஜக கட்சியில் சில எம்பி-க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக அரசின் அடாவடி நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மீண்டும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு ஹத்ராஸ் மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பட்ட நபர்கள் அவர்களுடன் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் உபி பாஜக அரசு பணிந்துள்ளதாக நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் வறுத்தெடுத்து வருகின்றனர்.