வராத மேட்டூர் பாசன நீர்: கைகொடுத்த மழை
சீர்காழி, டிச.2- கொள்ளிடம் பகுதியில் 10 ஆண்டு களுக்குப் பிறகு குளங்களில் தண்ணீர் நிரம்பியது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 200 கிராமங் களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குளங்கள் மற்றும் கோயில் குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தண்ணீரின்றி வறண்டு கிடந்தன. இந்தக் குளங்களில் தண்ணீரைப் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. ஏதோ ஒரு சில குளங்கள் மட்டும் சேரும் சகதியுமாக இருந்தது. பெரும்பாலான குளங்கள் வற்றியே கிடந்தன. மேட்டூரிலிருந்து கடந்த வருடங் களில் உரிய அளவு தண்ணீர் கொள்ளி டம் கடைமடை பகுதிக்கு வராததால் குளங்களுக்கும் தண்ணீர் சென்று சேரவில்லை. கடந்த இரண்டு மாதங் களுக்கும் முன்பு மேட்டூர் அணையி லிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும். கொள்ளிடம் கடைமடைப் பகுதியின் பிரதான வாய்க்கால்களில் மட்டுமே தண்ணீர் வந்தது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை.
இதனால் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சென்று சேராமல் வறண்டு கிடந்தன. இதனால் கிராமப் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பெரிதும் அவதியடைந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை அனைத்து கிராமப் பொதுக்குளங்கள் மற்றும் கோயில் குளங்களுக்கு தாராளமாக சென்றடைந்ததால் அனைத்து குளங்களும் நிரம்பி விட்டன. பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் குளங்களுக்கு சென்று சேராவிட்டாலும், மழை நீர் குளங் களில் நிரம்பியுள்ளது. இந்த நீரில் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் நீராடி மகிழ்ந்தனர். பல வருடங்களாக வற்றிக் கிடந்த குளங்கள் மற்றும் வாய்க்கால்களும் மழை நீரால் நிரம்பியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.