சென்னை,ஆக.9- சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மாவட்ட வாரியாக எப்படி நடைபெற்றுள் ளது. குடிமராமத்து பணிகள், வளர்ச்சிப் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி னார். முதல் நாள் கூட்டத்தில் நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, மதுரை உள்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். 2-வது நாளாக சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்பட 13 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமை யாக கிடைக்க ஆட்சியர்கள் பாடுபட வேண் டும் என்றும் துறை ரீதியாக திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறினார். வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவ தால் அந்த மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதி காரியாக அங்கு உள்ளதால் இந்த கூட்டத் தில் பங்கேற்கவில்லை. அதேபோல், மழை வெள்ளம் மீட்புப் பணி காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ளவில்லை.