tamilnadu

img

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்கவிழாவையொட்டி  சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் சிறப்பிதழை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட்டார். மூத்த தோழர் வீ.முருகையன், இளம்தோழர் காவியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாவட்ட செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஏ.பாக்கியம், எஸ்.கோபால், இ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.