டி.எம். தாமஸ் ஐசக் விமர்சனம்
திருவனந்தபுரம், ஏப்.18- ரிசர்வ் வங்கியின் இரண்டாவது தொகுப்பும் கடுமையான நெருக்கடி யை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை எனவும் மத்திய அரசைப் போலவே, மத்திய வங்கியும் முக்கிய விஷயங்களில் மவுனமாக உள்ளது என்றும் கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் கூறினார்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், ஒரு வருடத்திற்கான தடை, மைக்ரோ மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமான கடன் கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொகுப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஒரு முடிவை எடுக்கவில்லை. கொரோனா நெருக்க டியில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அரசாங்கங்களுக்கு உத வுகின்றன. பணத்தை அச்சிடுவது மற்றும் அரசாங்கங்களுக்கு நேரடி யாக கடன் வழங்குவது போன்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் என்று அவை அறிவிக்கின்றன. இங்கு எல்லாவற்றிலும், இந்திய ரிசர்வ் வங்கி அமைதியை கடைப்பிடிக்கி றது.
அன்றாட செலவினத்திற்கு கடன் வாங்குவதற்கான (வெயிஸ் மற்றும் மீன்ஸ்) வரம்புகளை உயர்த்தியுள்ள தால் மாநிலங்களின் பொருளாதார சிர மங்கள் மாறாது. கேரளத்திற்கு ஆண்டு துவக்கத்தில் வெயிஸ் அண்ட் மீன்ஸ் முன்பணம் மற்றும் அதற்கு சமமான ஓவர் டிராப்ட் வசதி உட்பட முதல் காலாண்டில் 3159 கோடி ரூபாய் வரை கடன் வாங்க அனுமதி உண்டு. ஓவர் டிராப்ட் 21 நாட்களுக்குள் திருப் பிச் செலுத்தப்பட வேண்டும். புதிய அறிவிப்பில், கேரளாவிற்கான தற்கா லிக தொகை ரூ.3888 கோடி. இது ரூ.729 கோடி அதிகமாகும். இந்த வசதி செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக் கும். அதன் பிறகு அது பழைய நிலைக்கு சென்று விடும்.
மாநிலங்களின் நிதி பற்றாக்குறை யை மூன்றிலிருந்து ஐந்து சதவிகித மாக உயர்த்த வேண்டும் என்பது கேர ளத்தின் கோரிக்கை. இதன் மூலம் ரூ.18,000 கோடி கூடுதல் கடன் கிடைக் கும். நபார்ட், சிட்பி மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றின் மறு நிதியளிப்பு வரவேற்கத்தக்கது. கேரளா கோரிய கூடுதல் கடன் நபார்டுக்குக் கிடைக்க வேண்டும். சிட்பி அதிக பணம் கேஎப்சிக்கு ஒதுக்க வேண்டும். தேசிய வீட்டுவசதி வங்கி லைப் மிஷன் கடன்களை அனு மதிக்க வேண்டும் எனவும் நிதி அமைச் சர் தாமஸ் ஐசக் கேட்டுக்கொண்டுள் ளார்.