tamilnadu

img

கிம் - டிரம்ப் திடீர் சந்திப்பு

சியோல்,ஜூன் 30-  கொரிய எல்லைப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு  டிரம்ப்,  வடகொரியா ஜனாதிபதி  கிம் ஜோங் உன் ஞாயிறன்று  திடீரென்று சந்தித்தனர். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று வடகொரியா  ஜனாதிபதி கிம் ஜோங்கை சந்தித்து ‘ஹலோ’ சொல்ல விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். வடகொரியா அரசு இந்த யோசனை வரவேற்கத் தக்கது என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, டிரம்ப்-கிம் இடையிலான அவசர சந்திப்புக்கு தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே உன் ஏற்பாடு செய்தார்.  இந்நிலையில்,  தென்கொரியா-வட கொரியா போருக்கு பின்னர் சமாதானப் பகுதியாக அறி விக்கப்பட்ட  பன்முன்ஜோம் எல்லையில் வடகொரியா  ஜனாதிபதி கிம் ஜோங் உன்  - டிரம்ப் ஆகியோர் சந்தித்தனர். வடகொரியா எல்லைக்குள் அமெரிக்க ஜனாதிபதி  முதன்முதலாக கால் பதித்துள்ளார்.  இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது தென்கொரிய ஜனாதிபதி  மூன் ஜே உன் உடனிருந் தார். ‘இந்தநாள் உலகத்து க்கு மிகவும் உன்னதமான நாள். இங்கு வந்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன். மிக உயர்வான விஷயங்கள் நடைபெறுகின்றன’ என்று டிரம்ப் கூறினார்.  இதற்கு முன்னர் சிங்கப் பூர் மற்றும் வியட்நாம் தலைநகர் ஹனோய் ஆகிய இடங்களில்  கிம் ஜோங் உன்  - டிரம்ப் சந்திப்பு நடை பெற்றுள்ளது.

;