tamilnadu

அகதிகள் படகு துனிசியக் கடலில் கவிழ்ந்த விபத்தில் 80 பேர் பலி?

அகதிகள் வந்த படகு துனிசியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லிபியாவிலிருந்து ஆப்பிரிக்க அகதிகள் வந்த படகு துனிசியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 80 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் துனிசியா மீனவர்களால் 4 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே மீட்கப்பட்ட ஒருவர் கூறியதாவது,' நாங்கள் நான்கு பேர் மரத்துண்டின் மீது மிதந்து வந்தோம். அலைகள் எங்களைத் தாக்கின. நாங்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் இம்மாதிரியே கடலில் வந்தோம் எங்களுடன் பயணித்த பலர் மரணம் அடைந்தனர்" என்றார்.