tamilnadu

img

4  கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை -ரஷ்ய பிரதமர் அறிவிப்பு

4 கொரோனா தடுப்பூசிகள்  மனிதர்களுக்கு பாதுகாப்பானவை என்று ரஷ்ய பிரதமர் அறிவித்துள்ளார். 
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது  நாட்டில் உள்ள 17 ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகி உள்ளது. மேலும் இரண்டு தடுப்பு ஊசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம், தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.