tamilnadu

img

சபரிமலை, ரபேல், ராகுல் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுதில்லி,நவ.13- சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம், ரபேல் ஒப்பந்தம், பிரதமர் குறித்து  ராகுல் காந்தி தெரிவித்த கருத்து ஆகிய வழக்குகளில் வியாழனன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவி லில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்தது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதும், ரபேல் விவகாரத்தில் பிரதமர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கிலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வியாழனன்று காலை 10.30 மணிக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

;