tamilnadu

img

இந்தியாவிலிருந்து அட்டாசே மர்மமாக வெளியேற்றம் வெளியுறவு இணையமைச்சர் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்

வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருவனந்தபுரம், ஜூலை 17- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் அட்டாசே நாட்டை விட்டு வெளியேறிய சம்பவத்திற்கு வெளி யுறவு அமைச்சகம் பதிலளிக்குமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் என்ஐஏ விசாரணை நடந்து கொண்டிருக்கையில் அட்டாசே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது மிகவும் தீவிரத் தன்மை கொண்டது என்று வாலிபர் சங்க கேரள மாநில செயற்குழு ஒரு அறிக்கையில் தெரி வித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரன் ஆரம்பத்தில் இருந்தே மர்மமான தலையீடுகளை செய்து வருகிறார். வி.முரளீதரன் அது ராஜீய பார்சல்கள் அல்ல என்பதை நிறுவ முயற்சித்ததை நாம் முதலில் பார்த்தோம். அவருக்கு பிடித்த கே.சுரேந்திரனும் கூட்டாளி களும் ஆரம்பத்தில் இருந்தே மக்க ளின் கவனத்தை திசை திருப்ப முயற் சிக்கின்றனர். மத்திய ஏஜென்சிகள் சிறப்பு விசாரணை கோருவதற்கு முரளீ தரன் தயாராகவில்லை. அமைச்சர வைக் கூட்டத்தில் மாநில அரசு முடிவு செய்து மையத்திடம் கேட்டால் மட்டுமே விசாரணையை அறிவிக்க முடியும் என்ற வினோதமான வாதத்தை மத்திய வெளிவிவகார துணை அமைச்சர் முன்வைத்தார். ஆனால் என்ஐஏ விசாரணையை மத்திய அரசு அறிவித்தது.

அட்டாசேயை இந்தியாவில் வைத்திருக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வெளியுறவு அமைச்சகம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் இந்தி யாவுடன் நல்ல ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளது. ராஜீய பார்சல்களை ஆய்வு செய்ய ஐக்கிய அரபு அமீரகம் விரைவாக அனுமதித்தது. இந்தியா வில் தங்குமாறு இந்தியா அட்டாசே யைக் கேட்டால், ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைத்திருக்கும். ஆனால் வெளி யுறவு அமைச்சகம் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளத் தயாராக வில்லை என்பது மர்மமாகும். அட்டாசே விமான நிலையம் வழியாக திரும்பியபோது, நமது வெளி யுறவு அமைச்சகம் அமைதியாக இருந்தது, என்ஐஏ வழக்கை பலவீனப் படுத்துவதற்காகவே. முரளீதரன் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரு வனந்தபுரம் அருகிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு பதிலாக பாஜக ஆட்சி நடத்தும் கர்நாடகாவுக்குச் சென்றிருக்கலாம் என்று முன்னரே சந்தேகிக்கப்பட்டது. இந்த வழக்கில் இப்போது முக்கியமான தகவல்களை வழங்க வேண்டிய அட்டாசே, விசாரணையை நாசமாக்குவதற்காக நாட்டை விட்டு வெளியேற மறைமுகமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜக தலைமைக்கும் வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரனுக்கும் பங்குள் ளது. பாஜக தலைவர்களில் ஒரு பகுதி யினர் வழக்கை நாசப்படுத்த முயற்சிப் பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.