நகராட்சி அலுவலகம் முற்றுகை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள 6ஆவது வார்டு குளக்கரை தெருவில் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாந்தோப்பு சேதம்
ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் அடுத்த வரதாரெட்டிபள்ளி மற்றும் டிபி பாளையம் வழியாக விவசாய நிலத்துக்குள் புகுந்த 17 காட்டுயானைகள் ரகுபதி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு மற்றும் உஷாராணி என்பவருடைய வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளன.
கடலூரில் தொற்று 458ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் வியாழனன்று (மே 28) 19 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட
வர்களின் எண்ணிக்கை 458ஆக உயர்துள்ளது.
நிவாரண உதவி
வேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தி.மலையில் 303ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழனன்று (மே 28) 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது.