tamilnadu

img

உள்ளாடைகளுடன் கைதிகளை சாலையில் அழைத்துச் சென்ற காவல்துறையினர்

ராஜஸ்தானில் உள்ளாடைகளுடன் கைதிகளை 2 கி.மீ  சாலையில் காவல்துறையினர்  நடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் விக்ரம் குர்ஜார் என்ற பாப்லாவை பெஹ்ரார் போலீசார் கைது செய்திருந்தனர். இதையடுத்து ஏ.கே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் காவல்நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதையடுத்து அங்கிருந்து விக்ரமை மீட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. 
இந்நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் கைகளில் விலங்கு மாட்டிய காவல்துறையினர் உள்ளாடைகளுடன் முகத்தை மறைக்காமல் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் சுமார் 2 கி.மீ தூரம் பேரணியாக நேற்று அழைத்துச் சென்றனர். உடன் கமாண்டோ படையினர் உட்பட 150 போலீசார் வந்தனர்.
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து எஸ்.பி அமன்தீப் சிங் கபூர் கூறும்போது அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து விக்ரம் குர்ஜாரை எப்படி மீட்டுச்சென்றனர் என்பதை செய்து காட்டவே அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் எந்த செய்தியையும் நாங்கள் பொது மக்களுக்கு சொல்ல வில்லை. என்றார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.