வாரணாசி இந்து பல்கலை.யில் மதப் பிரிவினையைத் தூண்டும் ஆர்எஸ்எஸ்
வாரணாசி, நவ.20- பேராசிரியர் முஸ்லிமாக இருப்ப தால், அவரை சமஸ்கிருதம் கற்றுத்தரு வதற்கு அனுமதிக்க முடியாது என்று ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி கலகத்தில் ஈடுபட்டு வருவதற்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். கல்வித்துறையில் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே மதப்பாகு பாட்டைப் புகுத்துவோரை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாரணாசி இந்து பல்கலைக்கழ கத்தில், கடந்த நவம்பர் 7-ஆம் தேதி துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட வர் பெரோஸ் கான். மதத்தின் அடிப்ப டையில் முஸ்லிம் என்றாலும், சமஸ்கிரு தத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ப தால், வாரணாசி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத இலக்கியத் துறையில் பேரா சிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், பெரோஸ் கானால் தற்போது வரை பேராசிரியர் பணியை ஏற்க முடிய வில்லை.
பெரோஸ் கான் ஒரு முஸ்லிம் என் றும், அவரை எவ்வாறு சமஸ்கிருதம் கற்றுத்தர நியமிக்கலாம்? என்றும் கூறி, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்தவர்கள், துணை வேந்தர் வீட்டிற்கு முன்பாக கலகத்தில் ஈடுபட்டு வருவதே இதற்கு காரண மாகும். ஆனால், அவர்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகத்தால் எந்த நடவடிக்கை யும் எடுக்க முடியவில்லை. மாறாக, கல கத்தில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணகுமார், சஷிகாந்த், சுப்னம், சக்ரபாணி உள் ளிட்ட ஏபிவிபி பேர்வழிகளிடம் பல்கலைக் கழக நிர்வாகம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிக்கிறது. ஆறுதலான விஷயம் என்னவென் றால், இப்பிரச்சனையில் பெரோஸ் கானுக்கு, வாரணாசி பல்கலைக்கழ கத்தின் சக பேராசிரியர்கள் அனை வரும் மத வித்தியாசமின்றி ஆதரவு தெரி வித்திருப்பதுதான்.
“பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரை சாதி மற்றும் மதத்தால் ஆவது ஒன்றும் இல்லை. இரண்டுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. முந்தைய காலங்க ளில் ஒடுக்கப்பட்டவர்கள், தற்போது தான் வாய்ப்புகளை பயன்படுத்தி முன் வருகின்றார்கள். இதுதான் மாறிக் கொண்டிருக்கும் இந்தியா. தகுதியுடை யவர்கள் யாரும் இந்து பல்கலைக்கழ கத்தில் வகுப்புகள் எடுக்கலாம். இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்று பழங்கால வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் பிரிவில் பாடம் எடுக்கும் பேராசிரியர் மகேஷ் பிரசாத் கூறி யுள்ளார். இதனிடையே, “போராட்டக்காரர் களின் மனதில் என்ன இருக்கின்றதோ அதை நான் கட்டாயமாக மாற்றுவேன்” என்றும் அவர்கள் தன்னிடம் சமஸ்கிரு தம் கற்பதற்கு முன்வருவார்கள் என்றும் பெரோஸ் கான் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
“என்னுடைய வாழ்நாள் முழு வதும் நான் சமஸ்கிருதம் கற்றுக் கொண் டிருந்தேன். அதாவது இரண்டாவது வகுப்பில் இருந்து நான் சமஸ்கிருதம் படித்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊரான பக்ரூவில் 30 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள். என்னு டைய மதகுருவோ, இந்த சமூகமோ நான் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறவில்லை. எனக்கு குரான் குறித்து அதிகம் தெரியாது. ஆனால் சமஸ்கிருத இலக்கியம் குறித்து நிறைய அறிவேன். என்னுடைய பகுதியில் வாழும் முக்கிய இந்து பிர முகர்கள் என்னுடைய சமஸ்கிருத ஞானத்தை பாராட்டியிருக்கிறார்கள். யாரும் என்னை ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதவில்லை. நான் தற்போது பல்கலைக்கழகத்தில் அதனை கற்றுத்தர வந்தேன். ஆனால் நான் ஒரு முஸ்லிம் என்பது தற்போது பெரிய பிரச்சனை யாக மாறி வருகிறது” என்று பெரோஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், “வேதங்களும் தர்ம சாஸ்தி ரங்களும் கற்பிக்க வேண்டுமென்றால் நான் ஒரு இந்துவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் நான் அபிக்யான் சகுந்தலம், உத்தர ராம்சரித்தி ரம், மகாகாவியம், ரகுவன்ஷ் மகா காவி யம், ஹர்ஷ் சரித்திரம் போன்ற சமஸ்கிருத இலக்கியம் மட்டுமே கற்றுத் தர வந்துள்ளேன். ஏற்கெனவே என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதைத் தான் நான் கற்றுத்தரப் போகின்றேன்; இதற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்றும் பெரோஸ் கான் கேள்வி எழுப்பி யுள்ளார். பெரோஸ் கான் சமஸ்கிருதத்தில், சாஸ்திரி (இளங்கலை), சிக்ஷா சாஸ்திரி (பி.எட்), ஆச்சரியா (முதுகலை) பட்டங் களை பெற்றதுடன், இறுதியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தானில் டாக்டர் பட்டம் பெற்று, நெட் மற்றும் ஜே.ஆர்.எப். தகுதிகளையும் பெற்றுள்ளார். பெரோஸ்கானின் தந்தை ரம்ஜான் கானும் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.