வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரத்பூரில் உள்ள ரயில் தண்டவாளங்கள் மீது அமர்ந்து குர்ஜார் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) சமுக மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் அரசு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீட்டை 21 சதவிகிதத்தில் இருந்து 26 சதவிகிதமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருந்தது. குர்ஜார் உட்பட நான்கு பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு சதவீத ஐடா ஒதுக்கீட்டை அளித்தது. இந்த நிலையில், புதனன்று, குர்ஜார் பகுதியின் ஊர் தலைவர் தலைமையில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூகத் தலைவர்களை ராஜஸ்தான் அரசின் பிரதிநிதி ஒருவர் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் தெரிவிக்கப்படும் என்றும், அதற்கான நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். அதனடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.