சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் கொரோனா வால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்ப டுத்துவ தற்காக தமிழகம் முழுவதும் தீவிர நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 15 மாநகராட்சி கள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் 789 கட்டுப் பாட்டு அறைகள் உருவாக்கப்பட் டுள்ளன.
இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் தெருக் களுக்குள் மற்றவர்கள் நடமாடுவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து அவர்கள் கண்கா ணித்து வருகிறார்கள்.
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பகுதிகளாக 385 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள் ளன. அந்த 385 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப் பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் கள் கிடைப்பதற்காக அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. மேலும் போலீசாரும் சுழற்சி முறையில் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.