tamilnadu

img

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடுக சிஐடியு சேலம் மாவட்ட 12 ஆவது மாநாட்டில் தீர்மானம்

மேட்டூர், ஜூன் 30-    சேலம் உருக்காலையை தனி யார் மயமாக்குவதை கைவிடு மாறு இந்திய தொழிற்சங்க மையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையத் தின் சேலம் மாவட்ட 12வது மாநாடு மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில் அமைந்துள்ள தோழர் கே.பி.வரதராஜன் நினை வரங்கத்தில் ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இரண் டாம் நாளாக ஞாயிறன்று நடை பெற்ற மாநாட்டில் பிரதிநிதி கள், விவாதம் ஆகியவற்றைத் தொடர்ந்து சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.
தீர்மானங்கள்
இதில் தொழிலாளர் நலச் சட்டங்களை முறையாக அமல் படுத்திட வேண்டும். நாள்தோறும் ஏறிவரும் பெட்ரோல், டீசல் உள் ளிட்ட விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மருத்து வ பிரதிநிதிகளுக்கு 8 மணி  நேரமாக பணி நேரத்தை உத்தர வாதப்படுத்த வேண்டும். போக்கு வரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங் கிட வேண்டும். சாலைப்போக்கு வரத்து மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். மேட்டூர் பகுதி யில் மின் வாரிய தொழிலாளர் களுக்கான கல்லூரிகள் அமைக் கப்பட வேண்டும். சுருட்டு தொழி லாளர்களுக்கான வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதப் படுத்த வேண்டும். சேலம் மாவட் டத்தில் இயங்கி வரும் ஐஓசி ஆலையில் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண் டும். பட்டு கைத்தறி நெசவாளர் களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசுநடவடிக்கை எடுக்க வேண் டும். வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள்
இதைத்தொடர்ந்து மாவட்ட தலைவராக பி.பன்னீர்செல்வம், செயலாளராக டி.உதயகுமார், பொருளாளராக வி.இளங்கோ,  உதவி தலைவர்களாக எஸ்.கே.தியாகராஜன், ஆர்.வெங்கட பதி, பி.கருப்பண்ணன், ஆர்.வைர மணி, லயமணி எஸ்.திருப்பதி, கே.செம்பன், வசந்தகுமாரி எ.சண்முகம், துணை செயலாளர்க ளாக எ.கோவிந்தன், சி.கருப்பண் ணன், ஓ.எஸ்.திலீப் மேனன், கே.பி.சுரேஷ்குமார், பி.கே.சிவகு மார்,  வி.ராமமூர்த்தி, எஸ்.தனம், ஆர். கிருஷ்ணமூர்த்தி, விஜயலட் சுமி உள்ளிட்ட 45 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. இறுதியாக சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு நிறைவுரையாற்றினார். முடிவில்  வரவேற்புக் குழு செயலாளர் கே.சுந்தர்ராஜன் நன்றி கூறி னார். இதனைத் தொடர்ந்து மாநாட்டுத் திடலிருந்து சதுரங் காடி, காந்தி சிலை வரை தொழிலா ளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.