tamilnadu

img

சின்மயாவை சங்கத்திலிருந்து நீக்கிய சாமியார்கள்!

ஹரித்துவார்:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன் னாள் மத்திய அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்தா (72), சட்டக் கல்லூரி மாணவியை(23) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான புலனாய்வுவிசாரணையில், சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இனிமேல் தப்பமுடியாது என்ற கட்டத்தில், சின்மயானந்தாவும் தனது குற் றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில், பாலியல்வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சின்மயானந்தாவை, சாமியார்கள் சங்கத்திலிருந்து நீக்குவதென அகில பாரதிய அகாரா பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது. 

சாமியார்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கையால், சின்மயானந்தா இனிமேல் தனது பெயருக்கு முன்னாள் சுவாமி அல்லது துறவி என்றஅடையாளத்தை இணைத்துக் கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. எனினும், அக்டோபர் 10-ஆம் தேதி ஹரித்துவாரில் நடைபெறும் சங்கத்தின் முறைப்படியான கூட்டத்தில்இதுதொடர்பாக அதிகாரப் பூர்வ அறிவிக்கப்படும் என்றும், சின்மயானந்தா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படும் வரை அவருக்கான தடை நீடிக்கும் என்றும் அகாரா அமைப்பின் தலைவரான மகந்த் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.