மும்பை, ஆக.11 - உலகில் எதிர்காலத்தில் பேசும் கணினிகள் சாத்தியமாகும் என்றால், அது சமஸ்கிருதத்தின் பங்களிப்புடன்தான் என்றும் உலகின் ஒரே அறிவியல் மொழி சமஸ்கிருதம்தான் என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார். மும்பை ஐஐடியில் 57-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், நாசாவின் கூற்றுப்படி உலகில் எதிர்காலத்தில் பேசும் கணினிகள் உருவாவது சாத்தியம் என்றால், அது சமஸ்கிருத மொழியின் பங்களிப்புடன்தான் என நாசா தெரிவித்துள்ளது. சமஸ்கிருதம் என்பது ஒரு அறிவியல் மொழி, நாம் என்ன பேசுகிறோமோ அதைத்தான் எழுதுகிறோம் என நாசா தெரிவித்துள்ளது. சக்ரா ரிஷி என்பவர்தான் ஆயுர்வேதத்துக்கு முக்கியமான பங்களிப்பு செய்தவர். அணு மற்றும் மூலக்கூறுகளை முதன் முதலில் ஆய்வு செய்தவரும் அவர்தான். அணுவையும், மூலக்கூறுகளை யும் உலகில் யார் முதன்முதலில் ஆய்வு செய்தவர் என்று நினைக்கிறீர்கள் சக்ரா ரிஷிதான். உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஷ்ருதாதான் என்றார்.