கண. முத்தையா 1913ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் பிறந்தார்.இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்திய விடுதலைக்காகப் போராடியவரும், தமிழ் பதிப்புலகமுன்னோடியும் ஆவார். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கண்ணப்பன்மறைவால் மெட்ரிக் தேர்வு எழுத இயலாது, தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.இந்திய விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றவர். 1936-ல் வணிகத்திற்காக பர்மா சென்று, தன வணிகன் இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர். 1937-இல் ஜோதி மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார்.
பர்மாவின் ரங்கூன் நகரை அடுத்த கம்பை எனும் ஊரில் உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, 1945ல் நேதாஜியின்இந்திய தேசிய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின்மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார். நேதாஜியை கடைசியாக சந்தித்தவெகு சிலரில் இவரும் ஒருவர். பர்மாவில் போர்க் கைதியாக ஓராண்டு காலம்சிறையில் இருந்தபோது, இராகுல் சாங்கிருத்தியாயனின் பொதுவுடைமைதான்என்ன? வால்காவிலிருந்து கங்கை வரை என இரண்டு நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.1946-இல் தமிழ் புத்தகாலயத்தை நிறுவினார். நேதாஜியின் புரட்சிஎன்ற நூலை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார். மாவோ, கார்க்கி, ஸ்டாலின் ஆகியோரது நூல்களை தமிழில் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ்இலக்கியவாதிகளின் நூல்களை மட்டுமல்லாது, பிரேம்சந்த் போன்ற இந்திமொழி இலக்கியவாதிகளின் நூல்களையும் தமிழில் வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதலில் பதிப்பித்தவர். இவர் 1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் நாள் மறைந்தார்.
===பெரணமல்லூர் சேகரன்===