tamilnadu

img

ஆர்டி.பி.சி.ஆர் சோதனைக்கு வரும் பயணிகளுக்கு உணவு, இலவச வைஃபை

மும்பை விமான நிலையத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு வரும் பயணிகள் காத்திருக்கும் நேரங்களிலும், சிறப்பு அட்டவணையில் உணவுப் பொருள்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். வரம்பில்லாத இலவச வைஃபை வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், சூடான மற்றும் குளிரான பானங்கள் வழங்கப்படுகிறது என சிஎஸ்எம்ஐஏ தெரிவித்துள்ளது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (சி.எஸ்.எம்.ஐ.ஏ) ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதியைப் பெறும் பயணிகளுக்கு இப்போது சோதனை மற்றும் சோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருக்கும்போது உணவு மற்றும் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்று விமான நிலையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 

ஒரு நபருக்கு ரூ.3,900 செலவில் மாதிரிகள்  எடுக்கப்பட்ட பின்னர் சுமார் எட்டு மணி நேரத்தில் சோதனை முடிவுகள் வழங்கப்படுகின்றன. விமான நிலையத்தில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை வசதி செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் பின்னர், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் 6,910 ஆண்கள் மற்றும் 1,090 பெண்கள் இந்த சேவையைப் பெற்றுள்ளனர். அவர்களில், சுமார் 100 பயணிகள் கொரோனா தொற்றுக்கு சாதகமான சோதனை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.