மும்பையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் இல்லத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தியுள்ளனர். இதில், கிலோ கணக்கில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற தயாரிப்பாளரின் இல்லத்தில் என்சிபி (போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம்) சோதனை நடத்தியுள்ளது. இதில் பெண் ஒருவரை அவரது இல்லத்தில் இருந்து என்சிபி அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
நவம்பர் 7-8 தேதிகளில் அந்தேரி மற்றும் கார்கர் பகுதிகள் உட்பட ஐந்து இடங்களில் சோதனை நடத்திய பின்னர் ஒரு போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையில், ஆறு கிலோகிராம், கஞ்சா, சில சரஸ், மெபெட்ரோன் (இன்னும் அறியப்படாத அளவு), மற்றும் சில ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த விஷயத்தில் சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என என்சிபி கூறியுள்ளது.