மும்பையில் உள்ள நடிகர் அர்ஜுன் ராம்பால் வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஃபிரோஸ் நதியாட்வாலாவின் மனைவி ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தொடர்பான வழக்கில் என்.சி.பியால் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். என்.சி.பியால் வரவழைக்கப்பட்ட ஃபிரோஸ் நதியாட்வாலா விசாரணைக்கு வந்துள்ளார். அவரது மனைவி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, என்.சி.பி திரைப்பட தயாரிப்பாளர் நதியாட்வாலாவின் வீட்டில் சோதனை நடத்தியது. அவரது மனைவி ஷபானா சயீத்தை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதை பொருளை வாஹித் அப்துல் கதிர் ஷேக் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நடத்தப்பட்ட மொத்த சோதனைகளில், 717.1 கிராம் கஞ்சா, 74.1 கிராம் சரஸ் மற்றும் 95.1 கிராம் எம்.டி ஆகியவை ரூ.3,58,610 ரொக்கத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ஷபனா சயீத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பிரிவு 67 ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது அறிக்கையை பதிவு செய்த பின்னர் அவரையும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் நவம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.