tamilnadu

img

கொரோனாவால் இறந்தவர் உடல் குடும்பத்திற்கு தெரியாமல் எரிப்பு... தாய்-மனைவி கண்ணீர்

மும்பை:
கொரோனா வைரஸால் மும்பை மருத்துவமனையில் தனிமைப்படுத்தலில் இறந்த நபரை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் தகனம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நோயாளி களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மும்பைமாநகரில் தான் அதிகம் உள்ளது. மகாராஷ்டிராவில்  34,890 பேரிடம் தொற்று கண்டறியப் பட்டுள்ளது, இதுவரை 2,197 பேர் இறந்துள்ளனர். 

கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது.இந்த நிலையில் மும்பையின் வடாலா பர்கடலிநகரில் வசிக்கும் ராகேஷ் வர்மா என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மே மாத தொடக்கத்தில் ஜோகேஸ்வரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராகேஷ் வர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டாய சுய தனிமையில் வைக்கப்பட்டிருந்தனர்.மே 21-ஆம் தேதி  சுய தனிமை முடிந்ததும், மருத்துவமனையில் உள்ள ராகேஷ் வர்மாவை சந்திக்க குடும்பத்தினர் சென்றுள்ளனர். அங்கு விசாரித்தபோது ராகேஷ் வர்மா 17-ம் தேதியே இறந்துவிட்டதாகவும், அவரது உடலுக்கு யாரும் உரிமை கோராததால் காவல்துறையினர் உடலை அப்புறப்படுத்தியதாகவும் அங்கு பணியாற்றிய செவிலியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பை வடாலா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. “எனக்கு நீதி வேண்டும். என் மகன் உடலை பார்க்காமல் அவர் இறந்துவிட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்று கேட்டு இறந்தவரின் தாயார் ஆனந்தா கதறி அழுதுள்ளார். ராகேஷ் வர்மாவின் மனைவி சுபாஷினி வர்மா கூறுகையில், “அவருக்கு  ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறி வந்துள்ளனர். கடைசியாக அவர் இறந்ததைக் கூட தெரிவிக்காமல் உடலை அவர்களே தகனம் செய்துவிட்டனர்.

;