tamilnadu

img

ஏப்ரல் 15-லிருந்து விமான முன்பதிவு... ஏர் ஆசியா அறிவிப்பு 

மும்பை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை வரும் 14-ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது. 

இந்நிலையில் 21 நாள் ஊரடங்கு வரும் 14-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், ஊரடங்கு விஷயத்தில் அரசு உறுதியான தகவல் தெரிவிக்காததை என்பதைக் காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனம் தனது முன்பதிவு  சேவையை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், 15-ஆம் தேதியிலிருந்து முன்பதிவை துவங்கவுள்ளதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த கட்டண கேரியர் ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் தனது விமான முன்பதிவுகளைத் துவக்க உள்ளதாகவும், தாங்கள் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) உத்தரவைக் கடைப்பிடிப்போம் என ஏர் ஆசியா நிறுவனம் கூறி உள்ளது.

குறைந்த கட்டண கேரியர்களான கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை மே 1 முதல் சர்வதேச முன்பதிவுகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
 

;