சென்னை,ஜன.5- பொங்கல் பண்டிகைக்கு பேருந்து களில் சொந்த ஊர் செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொங்கலையொட்டிசொந்த ஊரில் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பேருந்துகளில் முன்பதிவு கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதத்துக்கு முன்பே அரசு போக்கு வரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது. வெளியூர் செல்லக்கூடியவர்கள் வருகிற 11, 12, 13 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ள வசதியாக அரசு விரைவு போக்கு வரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த 3 நாட்களில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 1,200 பேருந்துகளில் பயணம் செய்ய இந்த முன்பதிவு நடந்திருப்பதாக போக்கு வரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.