சென்னை, ஜூலை 2 - அமலாக்கத்துறை (ஈடி), சிபிஐ போன்ற அமைப்புகள் பாஜகவின் இளைஞரணி போல் செயல்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சாடினார். ஆர்எஸ்எஸ் - ஒன்றிய பாஜக அரசின் அரவணைப்போடு நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் சனிக்கிழமையன்று (ஜூலை 2) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவ ட்டக்குழுக்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தின. இந்தப் போராட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “இந்தியா-பாகி ஸ்தான் பிளவுபடவும், காந்தி கொல்லப்படவும் மதவெறியே காரணம். குஜராத் மதக்கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்.பி., எரித்து கொல்லப்பட்ட வழக்கில், வழக்கு தொடர்ந்தவர்களை குற்றவா ளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு உதவி செய்த மனித உரிமை போராளி டீஸ்தா செதல்வாத், காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் போன்றோரை கைது செய்துள்ளனர். ராணுவம், நீதிமன்றம் போன்றவை மதவெறிமயாக்கப்பட்டுள்ளது. ஈடி, சிபிஐ போன்ற அமைப்புகள் பாஜக வின் இளைஞர் அணி போல செயல்படு கின்றன” என்றார். “பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா பேசியது தனிப்பட்ட கருத்தல்ல. பாஜக கூட்டங்களில் மோடி, அமித்ஷா பேசி வந்ததை, தொலைக் காட்சியில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்வது ஏற்புடையதல்ல; தண்டிக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இதுபோன்ற மத வெறி பிரச்சாரங்களை பாஜக செய்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட் டார். “தமி
“தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த மடாதிபதிகள் மதுரையில் மாநாடு நடத்துகின்றனர். விடுதலை போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த இஸ்லாமியர்களை தேச துரோகிகள் என்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் சாலைகளில் நடமாட அச்சப்படும் சூழல் உள்ளது. பெரும்பான்மை மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் பொரு ளாதார தாக்குதலை திசை திருப்பவே, சிறுபான்மை மக்கள் மீது தாக்குதலை தொடர்ந்து நடத்துகின்றனர். இவற்றையெல்லாம் முறியடிப்போம்” என்றும் பாலகிருஷ்ணன் என்றார். என்.குணசேகரன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குறிப்பிடுகையில், “ பாஜக பொறுப்பேற்றது முதல் ஜனநாயகத்தை இருட்டில் தேட வேண்டிய நிலை உள்ளது. கும்பல் கொலை என்றாலே உலக நாடு களுக்கு இந்தியா நினைவுக்கு வரும் நிலையில் நாடு உள்ளது. உணர்ச்சி வெளிப்பாடாக இல்லாமல், மதவெறி ஊட்டி திட்டமிட்ட படுகொலைகளை செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தை சீர்கு லைக்கும். பொருளாதாரத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் பெரும்பான்மை இந்து மக்க ளும் பாதிக்கப்படுவார்கள். சிறுபா ன்மை மக்கள் மீதான தாக்குதல் பெரும்பான்மை மக்கள் மீதான தாக்குதலே” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்த ராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (தென்சென்னை) சைதை பகுதி செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.