மதுரை, மார்ச் 28- மதுரையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை முத்தூட் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து நடத்தியது. முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து, மதுரையில் நடத்திய இளைஞர் களின் வேலை வாய்ப்புக்கான சிறப்பு சாப்ட் ஸ்கில் பயிற்சி பெற்று தற்போது பணியில் இருக்கும் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலை வாய்ப்புக்குப் பிறகு இளைஞர்களிடம் ஏற்பட்ட மாற்றம் குறித்து கருத்து சேகரிக்கவும், அவர்களு டன் உரையாடவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராதாகிருஷ்ண கொண்டா பங்கேற்று இளைஞர்களிடம் பேசினார். இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான முத்தூட் ஃபைனான்ஸ் உடனான கூட்டு செயல்பாடுகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். முத்தூட் ஃபைனான்ஸ் மண்டலத் தலைவர் ஜெயக்குமார் பேசுகையில் கிராமப்புற இளைஞர்களை மேம்படுத்துவதில் முத்தூட் நிறுவனத்தின் பங்கு பற்றி யும், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா முயற்சியில் மதுரையில் 114 இளை ஞர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற 65 இளைஞர்களுடன் உரையாடி அவர்களின் கருத்துக் களையும் பெற்றார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் ராபர்ட் ராஜா முதன்மை மேலாளர் அருள் குமார், எஸ்ஆர்வி பயிற்சி அகாடமியின் பொறுப்பாளர்கள் வடிவேல் அகஸ்டின் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.