tamilnadu

img

வேலை கேட்டு இளைஞர்கள் சைக்கிள் பிரச்சாரப் பயணம்

சென்னை, மார்ச் 26- இளைஞர்களுக்கு வேலை கொடு எனும் கோரிக்கைக்காக வாலி பர் சங்கம் சார்பில் சைக்கிள் பிரச் சார பயணம் ஏப்ரல் 21 இல் சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி நான்கு முனைகளிலிருந்து துவங்கி மே 1 அன்று திருச்சியில் சங்கமம் ஆகி றது. இந்தியா முழுவதும் வேலை யின்மை நெருக்கடி அதிகரித்து வருகிறது. 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உரு வாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த மோடி அரசு வேலை வாய்ப்பு களை உருவாக்கவில்லை. தற்சம யம் இருக்கிற வேலை வாய்ப்பு களையும் அழிக்கும் நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

“எங்கே எனது வேலை” என கேட்கும் இளைஞர்களிடம் பக்கோடா விற்கச் சொல்கிறது.  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பேரிடர் காரணமாகவும் ஒரு கோடிக்கும் அதிகமான சிறு, குறு தொழில் நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர். எல்ஐசி உள்ளிட்ட லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்கி வருகிறது. அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளி களை மேலும் செல்வந்தர்களாக்கி வருகிறது. “சப்கா சாத் சப்கா விகாஸ்” எனும் மோடியின் அனைவருக்கு மான வளர்ச்சி என்பது ஏமாற்று வித் தையாக மாறியுள்ளது. இந்தியாவில் நகர்ப்புறங்களில் உள்ள 23 சதவிகிதம் இளைஞர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். 2021 நவம்பர் மாதம் மட்டும் மாதச் சம்பளம் பெற்றுவந்த 68 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் மட்டும் 20 கோடி பேர் வரை வறுமையில் வீழ்ந்தி ருக்கின்றனர். 

வேலையின்மையால் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் 9140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு வேலை யின்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத ஆளும் அரசாங்கத்தின் திறமையின்மையையே இது காட்டுகிறது.  தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு கணக்கின் படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 75 லட்சத்திற்கும் மேலாகும். டிசம்பர் 2021 இன் படி தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 6.8 சதவிகிதமாகும். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் நிதி அமைச்சர் கணக்குப்படி 06 லட்சத்திற்கும் மேல் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. டிஎன்பி எஸ்சி மூலம் 2022 ஆம் ஆண்டு 11 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு முன் வர வேண்டும். பாசிச சிந்தனை கொண்ட ஆர்எஸ்எஸ்சினால் வழி நடத்தக்கூடிய ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகள் வேலை வாய்ப்பை மேலும் மேலும் அழித்து வருகின்றன. இளைஞர்களின் பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில் ஒன்றிய பாஜக அரசு, குடியுரிமை திருத்த சட்டம், மாட்டுக்கறி, ஹிஜாப், தலித் மக்கள் மீதான தாக்குதல் என வெறுப்பை விதைக்கும் பிரிவினை அரசியலை மேற்கொள்கின்றனர். பெரியார் சிலையை அவமரியாதை செய்வது, தேசவிரோதிகள் என்பது, சாதிய, மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.  வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

• ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும்.
•இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்சிங், திட்ட அடிப்படையில் நியமனத்தை தவிர்த்திடு.
• பணி நியமனத்தை நிரந்தர அடிப்படையில் மேற்கொள்ள.
• மனித மற்றும் வளங்களை பயன்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
• தனியார்துறை வேலை வாய்ப்பில் இட
ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் பணி பாது
காப்பை உறுதிப்படுத்து.
• நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமலாக்கிடு.
• குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.18000 என சட்டம் இயற்று.
•பெண்களுக்கு பணியிடங்களில் பாது
காப்பை உறுதி செய்திடு.
• அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமை ஆக்கிடு.

என வலியுறுத்தி 2022 ஏப்ரல் 21 முதல் 2022 மே 01 வரை சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி என நான்கு முனைகளிலிருந்து 3000 கிலோ மீட்டர் திருச்சி மாநகர் நோக்கி சைக்கிள் பயணம் நடைபெறவுள்ளது. இந்த பிரச்சார பயணத்தை விளக்கி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்களையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்த திட்டமிட்டுள்ளது. இப்பயணத்தில் தென்காசி, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, வேலூர், திரு வள்ளூர் ஆகிய ஏழு உப பயணமும் இணை கிறது. முதற்கட்டமாக மாநில சைக்கிள் பிரச்சாரம் பயணத்திற்கான இலட்சினையை இன்று 26/03/2022 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா சென்னை யிலுள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் வெளி யிட்டார். மாநில இணைச் செயலாளர் சி.பாலசந்திர போஸ், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வ ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.