இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் எஸ்.பாலா, என்.ரெஜிஸ்குமார், சி.பாலசந்திரபோஸ், ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் தலைமையில் சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருச்சி நோக்கி ஏப்ரல் 1 அன்று புறப்பட்ட சைக்கிள் பயணக்குழுக்கள் மே 1 (இன்று) திருச்சியில் சங்கமிக்கின்றன.