சென்னை, ஜூன் 26- தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு நிரந்தர அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியி டங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியி டங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுநிலை ஆசிரியர் பணியி டங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
இவ்வாறு தற்காலிக மாக நியமனம் செய்ய ப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 7500, பட்டதாரி ஆசிரி யர்களுக்கு மாதம் ரூபாய் 10 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இதே வார்த்தைகளைக் குறிப்பிட்டு த்தான் தற்காலிக ஆசிரி யர்கள் நியமனத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் நலனுக்காக என்று குறிப்பி ட்டாலும் உண்மையில் இந்த அரசுக்கு மாணவர் நலனில் துளியளவும் அக்கறை இல்லை என்பதையே இந்த அரசின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இத னால் ஏற்படும் காலிப் பணியி டங்களை நிரப்புவதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2012-13 கல்வி ஆண்டிற்குப் பிறகு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. அதுபோல கடந்த பல ஆண்டு களாக பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்ட தாரி ஆசிரியர்கள் பணிநிய மனத்திற்காக காத்தி ருக்கின்றனர். அது போல 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பை 9.9.2021 அன்று வெளியிட்டு விண்ணப் பங்கள் பெறப்பட்டு 12.2.2022 முதல் 20.2.2022 வரை கணினி வழி தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான தேர்வு முடிவுகளை வெளி யிட்டு ஆசிரியர் பணி நியமனத்தை நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு பள்ளி ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் நியமிப்பதை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து வரு கிறது. இது தற்செயலான நடவடிக்கை அல்ல. தமிழ கத்தில் நவீன தாராளமய மாக்கல் கொள்கைகள் அமலாக்கத் துவங்கியது முதல் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அரசுகள், அரசுபள்ளிகளில் நிரந்தர அடிப்படையில் ஆசி ரியர்களை நியமிப்பதை புறக்கணித்து வந்துள்ளன. தற்போது, கொரோனா பேரிடருக்கு பின்னால் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அரசுப்பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்நிலையில் கூடுதலான ஆசிரியர்களை பணிய மர்த்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்ப தற்காக தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வெளி யிட்டுள்ள அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், சமூக முன்னேற்றத்தில் கல்வி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அத்தகைய கல்வியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் அரசுப் பள்ளிகளில் காலி யாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களை யும் உடனடியாக நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.