சென்னை, டிச. 28- ஆன்லைன் ரம்மி தடை மசோதா வை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி இளைஞர்கள் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை சட்டவிரோதமாக முடக்கி வைத்திருக்கும் மக்கள் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ கத்தில் இருந்து வெளியேற வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னையில் புதனன்று (டிச. 28) ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கிண்டி ராஜீவ்காந்தி சிலை அருகே இளைஞர்கள் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். காவல்துறையின் தடுப்பை யும் மீறி இளைஞர்கள் ஆளுநர் மாளி கை நோக்கிச் சென்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் சிறிது தூரத்தில் மீண்டும் தடுத்து கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இதில் சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளா ளர் எஸ்.பாரதி, மத்தியக் குழு உறுப்பினர்கள் பிரியங்கா, செல்வராஜ், மாநில துணைத் தலைவர்கள் எல்.பி.சரவணத் தமிழன், சலாவுதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தீ. சந்துரு, ஏ.அறிவழகன், மதன், எஸ்.அறி வழகன் உள்ளிட்ட 500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் சாவுக்கு ஆளுநரே பொறுப்பு
போராட்டத்தின் போது, வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிங்கார வேலன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், வாரத்தில் இரண்டு, மூன்று இளை ஞர்கள் என இதுவரை 30க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஏராளமானோர் தங்கள் வாழ்க்கை யைத் தொலைத்துள்ளனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் கிடப்பில் போட்டிருக்கிறார். இதுவரை ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த இளைஞர்களின் மரணங்களுக்கு ஆளுநர் ரவிதான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
ஆளுநரா? ஆர்.எஸ்.எஸ். ஊழியரா?
ஒன்றிய பாஜக அரசு, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அமல்படுத்தும் நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ரவி, தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ். ஊழி யராகவே செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். ஆளுநரின் செயல்பாடு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு எதிரானது. எனவே அவரை உடனடியாக தமிழகத்தில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்றும் சிங்காரவேலன் கூறினார்.