tamilnadu

img

எங்கே எச்.ராஜா? உடனே உ.பி.க்கு செல்லவும்!

உத்தரப்பிரதேசத்தில் கோவில்களுக்கு தரவேண்டிய நிதி உதவியை யோகி அரசாங்கம் தரவில்லை. எனவே பல கோவில் நிர்வாகங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இத்தகைய சூழல் வேதனையானது என உயர் நீதிமன்றம் யோகி அரசாங்கத்தை சாடியுள்ளது. தமிழ்நாட்டில் 33 மாதங்களில் 1378 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கோவில்களை அறநிலை யத்துறையிடமிருந்து பறிக்க வேண்டும் என கூப்பாடு போடுகிறது. உத்தரப்பிரதேசசத்தில் யோகி அரசாங்கத்தின் அநீதி குறித்து மவுனம் காக்கிறது. எச்.ராஜா போன்றவர்கள் உ.பி.க்கு சென்று யோகிக்கு அறிவுரை வழங்கினால் அங்குள்ள கோவில்களுக்கு நல்லது!