tamilnadu

img

கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

கரூர் பரணி பார்க்  கல்விக் குழுமத்தில்  யோகா தினம் கொண்டாட்டம்

கரூர், ஜுன் 21-  கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் 11 ஆவது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் உலகப் பொது மறை திருக்குறள் வாசித்தலுடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பிரம்மாண்ட விழாவில் 6000 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.  விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரணி பார்க் முதல்வர் க.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சு.சுதாதேவி, எம்.குமாரசாமி பி.எட் கல்லூரி முதல்வர் சாந்தி, யோகா ஆசிரியர்கள் ராணி, உமாமகேஸ்வரி, மணிவண்ணன், வினோதினி, சிந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.