tamilnadu

img

அறிவியல் கதிர்

♦ மீத்தேனைக் கட்டுப்படுத்தும் கேபிள் பேக்டீரியா
பசுமைக் குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்தது மீத்தேன் ஆகும்.உலகில் மனிதர்கள் மூலம் வெளிவிடப்படும் மீத்தேன் அளவில் 11% நெல் வயல்களிலிருந்து வருகின்றது. எனவே இதைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.இதை கேபிள் பேக்டீரியாக்களைக் கொண்டு சாதிக்க முடியும் என்று ஒரு சோதனையில் காட்டப்பட்டுள்ளது.இழை வகை பேக்டீரியாக்களை சேர்ந்த கேபிள் பேக்டீரியா சல்பேட் அளவுகளை அதிகரிக்கின்றன. நெல் வளரும் தொட்டிகளில் கேபிள் பேக்டீரியாவை ஒரு முறை சேர்த்தபோது சல்பேட்டின் அளவு 5 மடங்கு அதிகரித்தது.இது கேபிள் பேக்டீரியா சேர்க்கப்படாத தொட்டிகளை ஒப்பிடும்போது மீத்தேன் வெளியீட்டை 93% குறைத்தது. ஆகவே நெல்வயல்களில் வளங்களை சேர்ப்பதன் மூலம் கேபிள் பேக்டீரியாக்களை அதிகரித்து மனிதர்கள் மூலம் உமிழப்படும் மீத்தேன் வாயு அளவை குறைக்கலாம்.  

♦ உறைபனியில் புதிய நுண்ணுயிரிகள்
உறைபனியாக உள்ள திபெத்திய பீட பூமியில் கிட்ட தட்ட 1000 புதிய நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.இவற்றில் 968 பேக்டீரியா வகைகளில் 98% அறிவியல் அறிந்திராதவையாம்.சில பேக்டீரியாக்கள் 15000 வருடமாக வாழ்ந்து வருபவையாம்.இந்தப் பனிப்பாறைகள் உருகும்போது இந்த நுண்ணுயிரிகளிலுள்ள புதிய  தொற்றும் காரணிகள் இந்தியாவிலும் சீனாவிலும் தொற்று மற்றும் பெரும் தொற்றுகள் ஏற்படத்தலாம் என்கிறார்கள்.

♦ விலங்கு மழை?
தெலிங்கானா மாநிலம் ஜாக்கிடில் எனும் இடத்தில் அரிய வான் நிகழ்வாக வானிலிருந்து மீன்கள் மழையாகக் கொட்டின.  நீர் வாழ் சிறிய உயிரினங்களான தவளை,நண்டு மீன் போன்றவை நிலத்தின் மேற்பரப்பில் தண்ணீர் நீரூற்றுகள் ஏற்படும்போது அவற்றினால் மேலே தூக்கி செல்லப்படுகின்றன.பிறகு அவை மேலிருந்து மழையாக கீழே கொட்டப்படுகின்றன.இதை ‘விலங்கு மழை’ என்கிறார்கள்.

♦ எந்த சூழலிலும் பிழைத்திருக்கும் நுண்ணுயிர்

டார்டிகிரேட்ஸ் (tardigrades) எனும் மிகச்சிறிய உயிரி நமது கொல்லைப்புறங்கள்,ஆழ்கடல்,அண்டார்டிக்கா,ஏன் பொருளற்ற வெளிகளில்கூட  உயிர் வாழக்கூடியது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.’கிடை மட்ட மரபணு மாற்றம்’(horizontal gene transfer (HGT) எனும் முறையில் அது எல்லா சூழலிலும் வாழக்கூடிய தன்மையைப் பெறுகிறது.சாதாரணமாக ஒரு உயிரினம் பெற்றோர்களிடமிருந்து மட்டுமே  மரபணுவைப் பெறும். ஆனால் டார்டிகிரேட்ஸ் மற்ற இனங்களிலிருந்தும் மரபணுவைப் பெறுகிறது.இதுவே கிடைமட்ட மரபணு மாற்றம் எனப்படுகிறது.சூழல்களை பொறுத்து டார்டிகிரேட்ஸ் தனது உடல் இயக்கங்களை நிறுத்திக் கொண்டு நீர் வற்றிய நிலையில் பத்து வருடங்களுக்கு ஆழ் உறக்கத்தில் இருக்கும்.இந்த நிலையில் அதன் டிஎன்ஏக்கள் துண்டுதுண்டாக உடைகின்றன.பின்னர் அதன் செல்கள் நீரார்ந்த நிலைக்கு மாறும்போது அதனுடைய கருவும் செல் சுற்றுசுவரும் கசியும் நிலையை அடைகின்றன.இதனால் வெளியிலிருந்து டிஎன்ஏ மற்றும் பிற பெரிய மூலக்கூறுகள் செல்லுக்குள் புக முடியும். இந்த நிலையில் தன்னுடைய டி என் ஏக்களை சீர்படுத்திக் கொள்வதுடன் பிற இனங்களிலிருந்து வரும் அந்நிய டி என் ஏக்களையும் தன்னுடைய ஜீன்களில் இணைத்துக் கொள்கின்றன.    இந்தக் கலப்பின ஜீன்கள் அதை கடினமான சூழல்களிலிருந்து பாதுகாக்கின்றன.மிகை அழுத்தத்திற்கு உள்ளாகும் உயிரினங்கள் இதைப்போல் அந்நிய ஜீன்களை பெற்றுக்கொள்கின்றன.ஆனால் இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட மரபணுக்களில் டார்டிகிரேட் மிக அதிகமான 17.5% அந்நிய ஜீன்களை பெற்றிருக்கின்றன. புவியின் கடினமான சூழலில் கோடிக்கணக்கான ஆண்டுகள் பேக்டீரியாவின் மரபணுக்கள் தாக்குப்பிடிக்க முடியுமானால் அவை பயனுள்ளவையாக இருக்க வேண்டும் என்கிறார் நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தாமஸ் பூத்பை இது பரிணாமம் குறித்த நமது பார்வையையும் மாற்றுகிறது.உயிர்களின் பரிணாமத்தை ஒருமரமாக கருதாமல்  ஒரு வலைப் பின்னலாகக் கருதலாம்.மரபணுக்கள் கிளையிலிருந்து கிளைக்கு தாவியிருக்கலாம்.என்கிறார் அவர்.

♦ கருப்பை மாற்று உறுப்பு
அமெரிக்காவில் 2016இலிருந்து 2021 வரை கருப்பை மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட 33 பெண்களில் 19 பேர் 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.இந்த மகப்பேறு அனைத்தும் சிசேரியன் முறையிலேயே நடைபெற்றுள்ளது.மாற்று உறுப்பு பொருத்தப்பட்டு சராசரியாக 14 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்றுள்ளன. இதில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் 36 மாத கர்ப்பத்திற்குப் பிறகு பிறந்துள்ளன.