உழைக்கும் மக்கள் ஓடிஓடி வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடிவிட்டோம். இனிமேல் ஓடுவதற்கு இடமே இல்லை. நின்று திரும்பி, நம்மை ஓட வைத்த மோடியின் ஆட்சியை திருப்பி அனுப்புவதற்கான, பதிலடி கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டும், தேர்தலுக்காக தமிழகத்தை சுற்றி சுற்றி வரக்கூடிய பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் தமிழக மக்கள் கண்ணீர் விட்ட போது வரவில்லை. வெள்ளக்காலத்தில் தமிழக திமுக அரசு செய்த உதவிகள்தான் பெரும்பகுதி மக்களுக்கு சென்றடைந்தது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு ஒற்றை பைசா கூட கொடுக்கவில்லை.