tamilnadu

img

கே.பாலபாரதியிடம் தீக்கதிர் சந்தா அளித்த தொழிலாளர்கள்

திருச்சி மாநகர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் காந்தி மார்க்கெட், தென்னூர், திருச்சி மத்திய பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளியன்று சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. சுமைப்பணித் தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், தரைகடை சங்க தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் என தொழிலாளர் வர்க்கத்தினர் தங்களது குரலை உரத்துப் பேசும் தீக்கதிர் நாளிதழுக்கு மனமுவந்து சந்தா தொகையை வழங்கினர். கட்சி மற்றும் சிஐடியு தலைவர்கள் பங்கேற்றனர்.

;