tamilnadu

உலகச் செய்திகள்

ஜெர்மனியின் முன்னாள் அதிபரான ஏஞ்சலா மெர்கெல், ஐக்கிய நாடுகள் சபையில் பணி யாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்துள் ளார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐ.நா.சபையின் பொதுச் செயலாள ரிடம் கடந்த வாரம் ஏஞ்சலா மெர்கெல் பேசினார். பணி யாற்ற விடுக்கப்பட்ட அழைப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு, அந்தப் பணியைத் தான் ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்து விட்டார் “ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

நேபாள மருத்துவமனைகளில் ஊழியர்களுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் மத்தி யில் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவியதே  இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்காக, தனிமைப்படுத் தப்பட்டதில் இருந்து ஒரு வாரம் நிறைவு பெற்றவுடன் பணியில் சேருமாறு சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஆப்பிரிக்க பெட்ரோலிய உற்பத்தியாளர்கள் கழ கத்தில் தென் அமெரிக்க நாடான வெனிசுலா உறுப்பினராக இணைந்திருக்கிறது. உற்பத்தி செய்வ தற்கான தொழில் நுட்பம், நிபுணத்துவம் ஆகியவற் றைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த கழகத்தில் இணையும் முதல் ஆப்பிரிக்கா அல்லாத நாடாக வெனிசுலா இருக்கும். 14 ஆப்பிரிக்க நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. வெனிசுலா இணை ப்புக்கு ஏகமனதாக அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.