மெலட்டூர், மே 21- மெலட்டூரில் 500 ஆண்டுக‘ள் பழமையான பாகவத மேளா நாடக விழா பிரகலாதா சரித்திர நாடகத்துடன் தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் 500 ஆண்டுகள் பழமையான பாகவத மேளா நாடக விழா பிரகலாதா சரித்திர நாடகத்துடன் தொடங்கியது. பாகவத மேளா நாடக விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூரில் பாகவத மேளா என்ற நாட்டிய நாடகக் கலை விழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரி யம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா நாட்டிய நாடகம் மெலட்டூர் பாக வத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா லட்சுமி நரசிம்மர் ஆலய வளாகத்தில் தொடங்கி யது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பிரகலாதா சரித்திரம், ஹரிசந்திரா, வள்ளி திரு மணம் போன்ற நாட்டிய நாடகங்கள் நடை பெற உள்ளன.
பிரகலாதா சரித்திரம் தினமும் இரவு தொடங்கும். பாகவத மேளா நாடகங்கள் அதி காலை வரை நடைபெறும். இந்த நாடகங்க ளில் ஆண்களே, பெண்கள் வேடம் தரித்து நடிப்பர். இந்த நாடக நடிகர்கள் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் அல்ல. இவர்கள் அனை வரும் வங்கி, தனியார் நிறுவனம், சாப்ட்வேர் கம்பெனி என பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் பல இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் மெலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தை, மகன் என தொடர்ந்து நடித்து நாட கங்களில் நடித்து வருகின்றனர். பாகவத மேளா நாடகவிழா பிரகலாதா சரித்திரம் என்ற நாட்டிய நாடகத்துடன் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்க இயக்குனர் எஸ்.குமார் செய்திருந்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் சிலிக்கான் ஆந்திரா பல்கலைக் கழக முதன்மையர் தீன பாபு கொண்டு பட்லா, சென்னை பரதாஞ்சலி கலை இயக்குநர் அனிதா குஹா, ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி கரியாலி உட்பட பலர் பங்கேற்றனர். சென்னை பரதாஞ்சலி கலை இயக்குநர் அனிதா குஹாவின் பிரைஸ் ஆப் செவன் ஹில்ஸ் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்த நாட்டியம் லெட்சுமி நரசிம்ம சுவாமிக்கு அர்ப்ப ணிக்கப் பட்டது. ஏற்பாட்டினை சங்க நிர்வாக அறங்காவலர் கலைமாமணி குமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
மோசமான சாலை
500-ஆண்டுகள் பெருமை மிக்க பாகவத மேளா நடக்கும் மெலட்டூரில் பல தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளது, மழைக் காலங்க ளில் இந்தச் சாலைகளில் நடந்துச் செல்ல முடியாது. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சாலை போட்டு பத்து வருடத்திற்கு மேலிருக்கும். இந்த சாலையில் மழை நாட்க ளில் நடந்து செல்ல முடியாது. இந்தச் சாலை யை பாகவதமேளாவை ஒட்டியாவது மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.