ராஞ்சி, ஜன.9- ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் அமைந்துள்ள்ளது. கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டும் ஒருங்கே அமைந் துள்ள இங்கு கொரோனா வைரசின் மரபணு மாற்றங்க ளை பரிசோதனை செய்வதற் கான கருவி இல்லை என கடந்த ஆண்டு அம் மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப் பட்டது. மேலும், மருத்துவமனை யில் போதிய மருத்துவ கருவி கள் இல்லை எனவும் அந்த வழக்கில் தெரிவிக்கப் பட்டது. இந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரவி சந்திரன். சுஜித் நாராயண் பிரசாத் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு மற்றும் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகம் மீது நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்த னர். மேலும், ஒமைக்ரான் தொற்று மாநிலத்திற்குள் பரவிய பின்னர் தான் கொ ரோனா வைரசின் மரபணு மாற்றங்களை பரிசோதனை செய்வதற்கான கருவியை மருத்துவமனை வாங்கிய தா? என்பதை மருத்துவ மனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். மருத்துவ உபகரணங்க ளை வாங்க முடியாத மாநில அரசு மற்றும் அதன் உயர் மட்ட மருத்துவ நிறுவனமான ராஜேந்திரா மருத்துவ அறி வியல் கழகத்தை கண்டித்த உயர்நீதிமன்றம் மக்கள் சுடு காட்டில் தகன மேடைக்கு சென்ற பின்னர் தான் தூக்கத் தில் இருந்து விழிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியது.