tamilnadu

img

சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு: பிரதமர் மவுனம் ஏன்?

அகர்தலா, ஏப்.27-  புல்வாமா பயங்கர வாதத் தாக்குதலையும், அதன் விளைவாக நடத்  தப்பட்ட பாலகோட் விமா னத் தாக்குதலை பயன்  படுத்தியே 2019-ஆம்  ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக திரி புரா முன்னாள் முதல்வர்  மாணிக் சர்க்கார்  குற்றம்சாட்டினார். திரிபுரா முன்னாள் முதல்வரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு - காஷ்மீர்  மாநிலம் புல்வாமாவில் நிகழ்ந்த தற் கொலைப்படைபயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பாலக் கோட்டில் இந்திய ராணுவம் விமானம் மூலம்  தாக்குதல் நடத்தியது. இந்த 2 சம்பவ சூழ லைப் பயன்படுத்தி பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது.

நாங்கள் அன்றே கூறினோம்

சம்பவம் நடந்தபோது ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தான்  இப்போது அதைப் பற்றி பேசுகிறார். ஆனால்  பாலகோட் சம்பவம் அரங்கேறிய தினமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சந்தேகத்தை வெளிப்படுத்தியது. வேலையின்மை போன்ற பிற எரியும் பிரச்சனைகளை மறைக்க 2019-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே  மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்த லுக்கு முன்பு பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதல், பாலகோட் விமானத் தாக்குதல் சம்பவத்தின் பின்னால் “ஆழமான சதி” இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. சத்யபால் மாலிக் பேட்டி குறித்து பிரத மர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இப்போ தும் மௌனம் கடைபிடிக்கின்றனர்.முன்  னாள் ராணுவ தளபதி (ஓய்வு) ஷங்கர் ராய்சவுத்ரியும் இந்த விவகாரம் குறித்து கவலை எழுப்பியுள்ள நிலையில், சத்ய பால் மாலிக் பேட்டி அளித்த பிறகு அவர் சிபிஐயால் சம்மன் அனுப்பப்படுவார் என்று  நான் நினைத்தேன்; எதிர்பார்த்தது போலவே காப்பீட்டு ஊழல் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு முகமை முன்பு ஆஜராகு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  நாடு முதன்முறையாக இதுபோன்ற ஒரு  பிற்போக்கு அரசாங்கத்தின் கொடுமை களை கடந்த 9 ஆண்களாக எதிர்கொண்டு அனுபவித்து வருகிறது.  மக்கள் ஒன்றிணைந்தால் பாஜகவை தோற்கடிக்க முடியும். திரிபுராவில் சமீபத்திய  சட்டமன்றத் தேர்தலில் 60 சதவீத வாக்கா ளர்கள் பாஜகவிற்கு ஆதரவளிக்கவில்லை. பாஜகவை வெளிப்படையாக விமர்சித்த அர சியல் சக்தியான திப்ரா மோதா கட்சி, பாஜக வின் வெற்றிக்கு உதவியது” என்று கூறினார்.