என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்டு ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம், ஜூன் 25 - என்னுடன் இருப்பவர்களுக்கு தேர்தல் சீட்டு வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலை வர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அரு ளுக்கு பாமகவின் இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “இந்த கூட்டம் ஆகஸ்ட் 10 இல் நடை பெற உள்ள பூம்புகார் மகளிர் மாநாடு குறித்து ஆலோ சனை செய்வதற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் நடைபெற்றது. பாமகவில் எனக்கே முழு அதிகாரம் உள்ளது. என்னைச் சந்தித்து கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் சீட்டு வழங்கப் படும். கூட்டணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது” என்றார்.
முன்னாள் அமைச்சர் கொலை முயற்சி வழக்கில் 15 பேர் விடுதலை
திண்டிவனம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தை, 2006ஆம் ஆண்டு திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் தொண்டர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது, காருக்கு அடியில் புகுந்து தப்பிய நிலையில் அவரது உறவினர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாமகவை சேர்ந்த சீனிவாசன் உட்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இதில், 5 பேர் விசாரணையின் போது மரணமடைந்த நிலையில், மீத முள்ள 15 பேரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்து திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநங்கைக்கு உயர்கல்வி வாய்ப்பு
சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், வறுமையால் உயர் கல்வியை தொடர முடியாமல் தவித்து வந்த திரு நங்கை சிவினுக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டண மில்லாமல் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் எந்தப் படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுமாறு கல்லூரித் தலைவர் முரளிதரன் கூறினார். இதையடுத்து, சிவின் பி.காம் சேர்ந்துள்ளார்.
400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் குறைபாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு
சென்னை, ஜூன் 25 - தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களில் குறிப்பிடத்தக்க குறைபாடு கள் இருப்பது அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் முதன்மை யான தொழில்நுட்ப நிறுவனங் கள் குறித்து அண்ணா பல்கலைக் கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தி யது. இதில் மாநிலத்தில் தொழில் நுட்பக் கல்வியின் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. ஆய்வில் போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது முதல் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வித் தரத்தை பூர்த்தி செய்யாதது வரை பல பிரச்சனைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்த கற்பித்தல் பணியாளர்கள் பற்றாக் குறை, போதுமான ஆய்வக வசதி கள் இல்லாமை, காலாவதியான பாடத்திட்டங்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நிர்ணயித்த அங்கீகாரத் தேவை களை பூர்த்தி செய்யத் தவறியது ஆகியவை குறைபாடுகளில் அடங்கும். சில கல்லூரிகளில் காலாவதி யான நூலகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லா தது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்று கல்வி நிபுணர்கள் தெரி வித்துள்ளனர். குறைபாடுகளை உடனடியாக தீர்க்குமாறு உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதி களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேனி, தென் காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசாணை வெளியீடு
சென்னை: அரசுப் பணிகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பணி பதவி உயர்வில் மொத்த இடங்களில் 4 சதவிகிதத்திற்கு குறையாத இடங்கள் ஒதுக்க வேண்டும் என சட்டம். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் கூறப் பட்டுள்ளதை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.