tamilnadu

img

இங்கே அடித்தால் அங்கே வலிப்பது ஏன்?

தேர்தல் பத்திரங்கள் வழக்கு மீண்டும் 18.03.2024 அன்று விசாரணைக்கு வந்த பொழுது எதிர் பாராத ஒன்று நடந்தது. பெரு முத லாளிகளின் மூன்று அமைப்புகளான பிக்கி, அசோசம், சிஐஐ, (FICCI/Asso cham/CII) ஆகியவை கூட்டாக தேர்தல் பத்திரங்கள் வழக்கில் தலையிட்டு கீழ்கண்ட வாதங்களை முன்வைத்தன: தேர்தல் பத்திரங்களில்  யாருக்கு யார் எவ்வளவு தந்தார்கள் எனும் ரகசியம் காப்பது அவசியம். அதனை வெளியிட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மை பாதிக்கும். இதனால் முதலீடுகள் குறையும். இதன் விளைவாக வேலைவாய்ப்புகளும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும். எனவே தேர்தல் பத்திரங்களின் தனித்துவ எண்களை வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கியை நிர்பந்திக்கக் கூடாது.  இந்த அமைப்புகளில்தான் அம்பானி/ அதானி/ டாடா/ இன்ஃபோசிஸ்/ விப்ரோவின் அஜீஸ் பிரேம்ஜி/ ஆதித்யா பிர்லா/ ஷிவ் நாடார்/ மித்தல் குழுமம் என மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. கார்ப்பரேட் நிர்வாகம் என்றாலே வெளிப்படைத்தன்மை என பெருமை பேசும் இந்த பெரு முதலாளிகளின் அமைப்புகள் வெளிப்படைத்தன்மைக்கு எதிராக வாதிட்டது விந்தை இல்லையா? மோடி அரசாங்கத்தின் தில்லு முல்லுகளை அம்பலமாக்கும் ஒரு வழக்கில் ஏன் இவர்கள் தலையிட வேண்டும்? இவர்கள் செய்தது தவறு இல்லை எனில் ஏன் இந்த பதற்றம்? ஏனெனில் அம்பலமாவது மோடி அரசு மட்டுமல்ல! இவர்களின் தில்லு முல்லுகளும்தான்! கார்ப்பரேட்டுகளின் அரசுதான் மோடி  அரசு என்பதற்கு மிகப்பெரிய நிரூபணம் இது! நவீன அறிவியலை  ஆயுதமாகக் கொண்டு பயணிக்கும் இவர்கள் மிகவும் பிற்போக்குத்தனமான மதவாதத்தையும் முழுமையாக ஆதரிக்கின்றனர், தமது கொள்ளை லாபத்துக்காக! இவர்களின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது ஒரு சிறப்பான செயல் எனில் மிகை அல்ல. தில்லுமுல்லு மோடி அரசை அகற்றுவோம்! பாஜகவை தோற்கடிப்போம்! தேசம் காப்போம்!!!