“மத்திய அரசின் நல்ல திட்டங் களை மக்களிடம் சென்று சேர விடாமல் திமுக அரசுதடுத்து நிறுத்துகின்றனர்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். சரி. திமுக அரசு தான் தடுத்து நிறுத்து கின்றது என்றால், அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது? எத்தனை நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்க ளிடம் கொண்டு சேர்த்தீர்கள் பிரதமர் மோடி அவர்களே! அண்மைக்காலம் வரை உங்களுடன் உறவாக இருந்த, நீங்கள் இழைத்த கொடுமைகளுக்கு எல்லாம் உடந்தை யாக இருந்த அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்: “கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், குஜ ராத் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பெரிய திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் வழங்க வில்லை. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்களிப்பு கூட கிடைக்கவில்லை”. இதுபோதுமா? இன்னும் ஆதாரம் வேணுமா? நீங்களும் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? அதை தடுத்து நிறுத்தியது யார்? இன்னும் ஒரு கேள்வி. நீங்கள் கொண்டுவருவதாகச் சொல்கிற திட்டங்களில் எது நல்ல திட்டம். உங்கள் அரசு கொண்டு வருவதெல்லாம் நாட்டு மக்களுக்கு நலன் தருபவை அல்லவே. உங்களது கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு தானே நலன் தருபவை! கேட்டாலும் கொடுக்கமாட்டீர்கள்! தானாகவும் தரவும் மாட்டீர்கள்!! பேச்சென்றால் பெரிதாய்ப் பேசுவீர்கள்!!! ஏப்.19- இல் நன்றாய் ஏமாறுவீர்கள்!!!! - ப.முருகன்