tamilnadu

img

‘எங்களுக்காகப் போராடியவர்’ டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு மக்கள் அஞ்சலி

கேப்டவுன், டிச.27- நிற வெறிக்கு எதிராகத் தனது வாழ்க்கை முழுவதும் போராடிய பாதிரியார் டெஸ்மாண்ட் டுட்டுவுக்கு தென் ஆப் பிரிக்க மக்கள் திரளாக அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே உயிரோடு போராடி வந்த 90 வயது டெஸ்மாண்ட் டுட்டு, அழிக்க முடியாத முத்திரையை நிற வெறிக்கு எதிரான போராட்டத்தில் பதித்தவராவார். இவருடைய பங்களிப்புக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்தார். இவர் குடியிருந்த அதே தெரு வில்தான் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட நாயகன் நெல்சன் மண்டேலாவும் குடியிருந்தார். ஒரே தெருவில் இரண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் குடியிருந்தது எங்கள் தெருவாகத்தான் இருக்கும் என்று பெருமையுடன் அத்தெருவில் வசிக்கும் லெரட்டோ கூறுகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி பலரும் தங்கள் அலைபேசிகளை அணைத்து வைத்து விட்டு, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பங்களோடு சென்று விடுவது வழக்கமான ஒன்றாகும். இதனால் டெஸ்மாண்ட் டுட்டுவின் மரணச் செய்தி பலருக்கும் ஒரு நாள் தாமதமாகவே சென்றடைந்தது. அப்படித் தாமதமாகச் செய்தி கிடைத்து வந்த செவிலியர் மிரியம் மோக்வாடி, “டெஸ்மாண்ட் டுட்டு எங்கள் நாயகர். அவர் எங்களுக்கா கப் போராடியவர்” என்று கூறுகையில் அவர்து கண்கள் பனித்தன. அரசு ஊழியர்களின் ஒருவரான டாப்னி ராமக் கோபா, “அவரால்தான் எங்களுக்கு விடுதலை கிடைத் தது. அவர் இல்லையென்றால் நாங்கள் எங்கள் நாட்டையே இழந்திருப்போம்” என்றார். மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஜனாதிபதி சிரில் ராமபோசா, “அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பது உண்மைதான். ஆனாலும் அவரது மரணம் பேரிடியாகவே எங்கள் மீது விழுந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.